திங்கள், நவம்பர் 11, 2013

தமிழனுக்குத் தனிநாடுதான் தீர்வு!

:                           "தனிநாடு கேட்டுப் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்!
தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்களுக்குத் தனிஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும்!
நேர்மையாக சிந்தித்தால் இவை இரண்டும்தான் தீர்வுகள். மற்ற அனைத்தும் பித்தலாட்டத்தின் பல்வேறு வடிவங்கள்!
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள். ஒன்றை தில்லி வெட்டும்! மற்றொன்றை திராவிடம் வெட்டும்! தில்லி வெட்டிய குழியில் தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல் தப்பித்தால் திருட்டுத் திராவிடம் வெட்டிய குழி இவனை விழுங்கக் காத்திருக்கும்!
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று வரிந்து கட்டி கருணாநிதி ஆடும் ஆட்டம், பச்சையான பித்தலாட்டம்! தில்லி காங்கிரசு சொல்லிக் கொடுத்து கருணாநிதி ஆவேச நடனம் ஆடுகிறார்.
நீ போனால் என்ன? போய்த் தொலையாமல் இருந்தால் என்ன?
கொலைகாரனுக்கு என்ன தண்டனை? என்பது பற்றி மட்டும் பேசு!
ஆடுகளையும் நரிகளையும் ஒரு பட்டியில் எப்படியடா அடைப்பாய்?
கொலையுண்ட மக்களின் பிறங்கடைகளும் கொலைவெறித் தாண்டவம் ஆடியவனும் ஒரு வீட்டுக்குள் எப்படியடா குடும்பம் நடத்தச் சொல்லுகிறாய்?
தமிழனுக்குத் தனிநாடுதான் தீர்வு!
அதற்காகத்தான் எங்கள் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன!
தமிழர் களம்
தமிழர் நாடு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக