வியாழன், டிசம்பர் 02, 2010

சாதனை புரிந்த கரூர் சக்தி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவி






செய்தி ; 01.12.2010 , சென்னை

01.12.2010 அன்று சென்னையில் நடைபெற்ற உலக மாற்று திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கரூர் சக்தி தாய் தமிழ் பள்ளியின் ஒரு அங்கமான , சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர் , அதில் நீளம் தாண்டும் போட்டியில் சிறுமி சிவா ( எ) சிவாணி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை சென்னை மாநகர மேயர் திரு. சுப்பிரமணியன், அண்ணா பல்கலைகழக வேந்தர் மன்னர் ஜவகர் ஆகியோர் பாராட்டி பரிசும் சான்றும் வழங்கினர் . பள்ளிதலைமை ஆசிரியை திருமதி. காமாட்சி காமராசு ஆகியோர் உடன் இருந்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக