தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வியாழன், டிசம்பர் 02, 2010
சாதனை புரிந்த கரூர் சக்தி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவி
செய்தி ; 01.12.2010 , சென்னை
01.12.2010 அன்று சென்னையில் நடைபெற்ற உலக மாற்று திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கரூர் சக்தி தாய் தமிழ் பள்ளியின் ஒரு அங்கமான , சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர் , அதில் நீளம் தாண்டும் போட்டியில் சிறுமி சிவா ( எ) சிவாணி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை சென்னை மாநகர மேயர் திரு. சுப்பிரமணியன், அண்ணா பல்கலைகழக வேந்தர் மன்னர் ஜவகர் ஆகியோர் பாராட்டி பரிசும் சான்றும் வழங்கினர் . பள்ளிதலைமை ஆசிரியை திருமதி. காமாட்சி காமராசு ஆகியோர் உடன் இருந்தனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக