ஞாயிறு, டிசம்பர் 12, 2010

தாய்த் தமிழ்ச் சகோதரிகளுக்கு ......

சென்ற ஆண்டில் ஈழ பிரச்சினையை முன்னிட்டு எழுதப்பட்டு பரப்புரை செய்யப்பட்ட துண்டறிக்கை . இப்போதும் தேவைபடுகிறது !!

எல்லாம் பெண்தான் என்று எப்போதும் பெருமை பேசும் ஆவேசக் கூட்டம் எங்கே போனது?
உலகில் எந்த மூலையில் பிறந்தாலும் பெண் எப்போதும் இரண்டாம்தரம் தான் என்பதை மெய்பிக்க சென்று விட்டனரோ? கண்ணீரும் செந்நீரும் சிந்தி ஒரு இனம் அழிந்து கொண்டிருகிறது . தாய்த் தமிழ் பெண்களே நம் ஈழத்து சகோதரிகள் அனைத்தையும் இழந்து அல்லலுற்றது போதாது என்று அவர்களின் பிணத்தையும் பாலியல் வன்மம் செய்யும் பிறப்பறியா பொறுக்கிகளின் சொல்லொணாக் கொடுமைகளுக்கு எல்லை இல்லை .
இங்கே இன்னமும் தொலைகாட்சியில் மானாட மயிலாட , மஸ்தானா மஸ்தானா தொடர்களில் மூழ்கியும் வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கி அலைகிறது ஒரு கூட்டம் , அறிவியல் தொழில் நுட்ப உலகில் நாங்களும் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறோம் , டாலரில் புரள்கிறோம் என்கிறது ஒரு கூட்டம் . பெண்கள் தன்னிகரில்லா முன்னேற்றம் அடைந்து வந்துள்ளனர். உண்மைதான் , மொத்தக் கணக்கில் அவர்கள் ஒரு சிலரே . இன்னமும் அறியாமையில் உள்ளவர்கள் பலர். முன்பு விறகு அடுப்பில் சோறு ஆக்கியவர்கள் இப்போது நவீன பொருட்கள் பாஸ்ட் புடுடன் வாழ்கின்றனர் . தெற்கேயிருந்து மேற்கே போய்விட்டனர் நம் பெண்கள் . அறிவியல் ஊடகங்களில் ஆன்மீக வழிபாடும் பரிகாரமும் தேடிக்கொண்டிருகின்றனர் . சமுக அவலங்களை எப்படி களைந்தெடுக்க போகின்றனர் . புரட்சி பேசிய பெண்களும் கணினித் துறையில் அதிக அளவில் பணி புரியும் பெண்கள் உள்ள இந்த தமிழ் நாட்டில் தான் மிக அதிகமான விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன . இவர்கள் தான் அறிவியல் கண்ட புதுமை பெண்கள்.
''அம்மா'' ''மம்மி'' ஆகி மேற்குலக வாழ்வில் தன்னை எப்படியாவது கரைத்துக் கொள்ள துணிந்துவிட்டதால் தனது சகோதரியின் பிணம் கூட பாலியில் வன்மத்துக்கு உள்ளாவதை சாதாரணமாக சகித்துக்கொண்டு இருக்கிறாள் போல . பெண்கள் களம் காணாதவரை இன்னமும் பல சகோதரிகளின் பிணங்களையும் ,சின்னஞ் சிறு பெண் பிள்ளைகளையும் வன்புணர்ச்சி செய்து தனது ஆண்மையை நிலை நாட்டிக் கொண்டிருப்பார்கள் சிங்கள வெறி காடையர்கள். அவர்களுக்கு ஆயுத உதவி , பண உதவி செய்து தனது படை பலத்தையும் ஆயுத பலத்தையும் நிறுவி 2020 இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் . ஒரு இனத்தை அழிப்பதில் அத்தனை பேராசை சிங்களவனுக்கு . அதை கை கட்டி வேடிக்கை பார்ப்பதில் நமது பங்கும் உள்ளது என்பதை தமிழ் பெண்களே உணர்ந்து கொள்ளுங்கள் .
மாணவர்களும் பெண்களும் புரட்சியை கையில் எடுக்காதவரை, வரலாற்றின் உண்மைகளை புரிந்துகொள்ளதவரை , நமது சகோதர சகோதரிகளின் அழிவை பார்த்துகொண்டிருக்க மட்டும்தான் முடியும் . அந்த நிலை நமக்கு வர வெகு நாட்கள் இல்லை.
மேற்குலகை நம்பி சாம்பலில் கரைய வேண்டாம் ! தமிழ் பெண்களே சிந்திப்பர் களம் காண்பீர் !!

( இப்போது இதை வெளியிட வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்தியுள்ளது . எப்படியெனில் சமீபத்தில் கரூர் வருகை தந்த மு. க. ஸ்டாலினை வரவேற்க மகளிர் தன் உதவிக் குழுக்களை சேர்ந்த பலநூற்றுகனக்கான பெண்கள் ஒரு சேலைக்காகவும் , சில நூறு பணத்திற்காகவும் நீண்ட வரிசையில் நின்றது ஏதோ அறியாமையில் நிகழ்ந்ததா? அல்ல தங்களுக்கான சலுகைகளை பெற எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்துவிட்டனரா? எந்த அரசியல் கட்சியானாலும் பெண்களின் நிலை இதுதான் . ஏன் மகளிர் அமைப்புகள் , மகளிர் தன் உதவி குழுக்களுக்கு இது போன்ற இழி செயல்களில் பங்கேற்க கூடாது என்று சொல்லகூடாதா? அரசியல் கட்சிகளுக்கு அடிவருடியாய் போக வேண்டிய கட்டாயம்தான் என்ன? அங்கே களம் நின்று சமர் புரியும் பெண்கள் எங்கே. இங்கே பணத்திற்காக வரிசையில் நிற்கும் பெண்கள் எங்கே . இந்த இழிநிலை மாற வேண்டாமா என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி . சோற்றுக்காகவும் , பணத்திற்காகவும் கையேந்த வைத்த இந்த தரங்கெட்ட தமிழர் அல்லாதவர்களின் அரசியல் தலைமையை தூக்கி எறிய வேண்டாமா? வரும் சட்ட மன்ற தேர்தலில் தமிழரையே ஆதரிப்போம் , தமிழரையே ஆளவைப்போம். தெலுங்கு மலையாள கன்னடர் போன்ற தமிழர் அல்லாதவர்கள் இங்கே நம்மை ஆளக் கூடாது அதற்காக களம் காணுங்கள் பெண்களே ! வரலாற்றை புரட்டுவோம் ! தமிழ்நாடு தமிழர்கே !! இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!)

- கருவை முருகு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக