செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

திமுக கருணாவின் திட்டவட்டமான ஆப்பு

ஈழத்தமிழருக்காய் என்பதவி துறப்பேனோ?
ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ?
மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?
சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!

மாற்றுக் கட்சிகளின் மண்டையிடி தாங்காமல்
மக்கள் சபைகலைப்பேன் என்றபொய்யும் அரசியல்தான்
வேற்றுத் தமிழர்க்காய் வீணாக என் பதவி
தூக்கிஎறிவேனோ தமிழர் தலைவன்நான்.!

தமிழர்க்காய் உயிர்கொடுப்பான் கருணாநிதியென்று
தமிழாநீ நம்பிவிட்டால் நானா பொறுப்பு?
தன்மானத் தமிழன்நான் பதவியை விட்டுவிட்டால்
வருமானம் போய்விடாதோ தமிழாநீ யோசியடா!!

உலகத்தமிழர்களின் தலைவன்என்று பெயரெடுக்க
உலுத்தல் வேலைபல உருப்படியாய் செய்தவன்நான்
புலிகள் கிளிநொச்சியை தோற்ற தை மாதத்தை
உலகம் புத்தாண்டாய் கொண்டாட வைத்தவன்நான்.

தேசியத்தலைவரென்று புலித்தலைவன் பெயர்எடுக்க
பாசிசத்தலைவன் நான் பார்த்தச்சும்மா இருப்பேனோ?
ஆசியஉலகமெல்லாம் தமிழர்களின் தலைவன்நான்!
ஆதலினால் செத்தாலும் ஆதரிக்கேன் பிரபாகரனை.

நாட்டைப் பிரிப்பதற்கு புலித்துணையாய் இருப்பேனோ?
காட்டில் அழிகின்ற தமிழர்காய் பதவிதுறப்பேனோ?
பாட்டுக்கதையெழுதி அரசியலைப்பிடித்தவன் நான்
கோட்டையைவிட்டுவிட்டு கோயில்மடம் போவேனோ?

ஏம்ஜிஆர் வளர்த்த புலி எப்படியும்போகட்டும்
எம்மகன்கள் நலம்காப்போம் ஏவல்செய்வோம் மத்திக்கு
எந்தஈழ தலைவர்களும் எமக்கென்றம் தேவையில்லை
எப்படியும் பிரபாகரனை ஆதரிக்கப்போவதில்லை.

ஈழத்தமிழா நீ முடிவை அறிந்தாயா?
துரோகத்தனத்துக்கே இந்தியாவில்ஓர் கருணா!
வீரத்தமிழனடா எம்வேங்கை தலைவனடா!
விதிவென்று தனியாக களம்வெல்வான் பார்த்துஇரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக