செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து ஒளித்து வை! காங்கிரசுக் கட்சியின் மீது அரிமாவளவன் கடும் தாக்கு!!



“உள்ளாட்சித் தேர்தலில் ஊழல் கட்சியான திமுகவுடன் எக்காரணம் கொண்டும் நாம் கூட்டணி வைக்கக் கூடாது” என்று, முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். “காந்தி, நேரு, காமராஜர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் செய்த தியாகம்தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாரம்பரியமும், வரலாறும் உள்ளது. நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் சிறை சென்றனர். ஆனால், கோடி கோடியாக ஊழல் செய்துவிட்டு திமுகவினர் சிறைக்குச் செல்கின்றனர்.” இப்படியெல்லாம் கூச்ச நாச்சமே இல்லாமல் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்புகூட இல்லாமல் பேசி இருக்கிறார், இளங்கோவன்.

இலங்கைப் பிரச்சனையில் காங்கிரசின் கபட நாடகத்திற்கு இப்போதுதான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள். இப்போது தங்களை மாசற்ற அரசியல்வாதிகள்போல இளங்கோவன் சித்தரிக்க முயல்கிறார்.

உத்திரப் பிரதேசம் குறித்துச் சொல்லும்போது ராகுல் காந்தி நான் இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் என்கிறார். மாயாவதி ஆட்களின் நிலப்பறிப்புப் பற்றி ராகுல் சொல்கிறார். 50 ஆண்டுகளாக திரும்பத் திரும்ப வந்த காங்கிரசு அங்கு செய்ததும் அதைத்தானே! அதனால்தானே மக்கள் முலயம்சிங் பக்கம் திரும்பினார்கள். உ.பி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறார். ஆனால், காங்கிரசு ஆட்சியில் விதர்பாவில் நடந்த விவசாயிகளின் தற்கொலைகள் நாடறிந்த கேவலம்! அதிலும் இழிவு என்னெவென்றால், அந்த விவசாயிகளுக்கு 72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு அத்தனையையும் அமுக்கிக் கொண்டு போனது காங்கிரஸ்காரர்கள்தான். சொட்டுக் காசுகூட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?

அசன் அலி என்பவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் 74ஆயிரம் கோடி வரி ஏய்ப்புத் தொடர்பான உசாவலை முடக்கி வைத்திருப்பது யார்? என்று சோனியாவிடம் கேட்டாலேயே விளங்கி விடுமே!

அயல் நாட்டு வங்கிகளில் அதுவும் குறிப்பாக ஸ்விஸ் வங்கிகளில் இருக்கிற இந்தியர்களின் கருப்புப் பணத்தைப் பற்றிய பட்டியலை வெளியிட பிரனாப் முகர்ஜி மறுப்பது ஏன்? 1991 நவம்பர் மாதத்தில் வெளிவந்த ஒரு கணக்கின்படி ராசீவ் காந்தி சுவிஸ் வங்கியில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை வைத்திருந்தார் என்று ஓர் அறிக்கை வெளியானதே! ராசீவ் காந்தியின் மறைவிற்குப் பிறகு அந்த முழுத் தொகைக்கும் வாரீசானது சோனியா காந்திதானே! இன்றைக்கு அந்தப் பணம் வட்டி, குட்டி எல்லாம் போட்டு எவ்வளவாகக் குவிந்து கிடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! ஒரு வேளை இந்தக் குட்டெல்லாம் வெளிவந்துவிடும் என்று நடுங்குவதால்தானோ பிரணாப் முகர்ஜி பட்டியலை வைத்துக் கொண்டு திரு திருவென விழிக்கிறார்?

அலைக்கற்றை ஊழலில் 60 விழுக்காட்டு ஊழல் தொகை யாருக்குப் போனது என்று சோனியா அம்மையாரைத்தான் கேட்க வேண்டும். சிறையில் உள்ள ராசா சிதம்பரத்தின் ரகசியம் பற்றி இப்போதுதான் மெல்ல உடைக்கிறார். அவ்வளவையும் உம்மென்று பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கும் பதறுகிறார். அவர்களையும் உள்ளே தூக்கி வைத்து விசாரிக்க வேண்டியதுதானே!

காமன் வெல்த் போட்டியில் காங்கிரசுக் கல்மாடி அடித்தது சில கோடிகள்! மீதிப் பல கோடிகள் போன திசை என்ன? அவரும்கூட இப்போது “எனக்கு மறதி நோய்” என்று ஒரேயடியாய் வழக்கு விசாரணையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டார்!

இந்தியன் ஏர் லைன்ஸ் ஏன் திவாலாகியது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் லாபம் தரக்கூடிய போக்குவரத்துத் தடங்களை ஏன் யாருக்கு விட்டுக் கொடுத்தது என்றும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பிரபுல் பட்டேலைக் கேட்டால்தான் தெரியும். ஏர் இந்தியா நட்டத்தில் நலிந்துபோக காங்கிரசுக் கொள்ளை காரணமாய் இருந்தது. ஆனால், அதைத்தூக்கி நிறுத்த மட்டும் அப்பாவி இந்தியர்களின் வரிப்பணம்தான் வேண்டுமா? விமானச் சேவையையே நிர்வகிக்க இயலாத நீங்கள் நாட்டை நலம்பட நடத்துவீர்களா?

நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) மத்திய ரிசர்வ் வங்கியில் நடத்திய ஓர் சோதனையின்போது அங்கே பெரும் அளவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட்டு இருந்தது பிடிபட்டது! இது கைப்பற்றப்பட்டது கள்ளனிடமும், கொள்ளைக்காரனிடமும் அல்ல! மத்திய ரிசர்வு வங்கியில். ஏன் காங்கிரசு அரசு அதுகுறித்து மூச்சுப் பேச்சு இன்றி அமைதி காக்கிறது?
ஆக, பணவீக்கம் என்று பிதற்றுவதெல்லாம் உங்களது தரிகெட்ட அரசியலினாலா அல்லது பொருளாதாரத்தினாலா?

20 ஆயிரம் பேரைக் கொன்றொழித்த போபால் விசவாயுக் கசிவுக்குக் காரணமான ஆன்டர்சன் என்ற அமெரிக்கனை கனகச்சிதமாகத் தப்பிக்க வைத்தது உங்களது காங்கிரசு ஆட்சி இல்லையா?

1984ல் நடத்தப்பட்ட சீக்கியப் படுகொலைக்குக் காரணனும் அதைச் செய்யச் சொல்லி ஆணையிட்டவனும் யார்? காங்கிரசுக்காரர்கள் காரணமில்லையா?

அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்த பிறகு நாட்டில் நெருக்கடி நிலை அறிவித்து அவர் செய்த அட்டூழியங்கள் பற்றி நீங்கள் அறியாததா அல்லது படிக்காததா? கருத்துச் சுதந்திரத்திற்கு அவர் அளித்த மதிப்பு உலகறிந்த இழிவு என்பது உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனது?

2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர விமான நிலையத்தில் உங்கள் “இளைய தங்கம்” ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு 9 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டதை நாட்டின் கண்களிலிருந்து மறைத்துவிட்டீர்கள். ஒரு லட்சத்து அறுபதாயிரம் அமெரிக்க டாலரோடு அவர் அங்கு பிடிபட்டார். அப்படிப் பிடிபட்டபோது கொலம்பிய போதைப் பொருள் கடத்தல்காரனின் மகளும் ராகுல் காந்தியின் “மிக நெருங்கிய” தோழியுமான வெரோனிக் கார்ட்டெலியோடு பிடிபட்டார் என்பதில் உண்மையில்லையா?
இறுதியில் அப்போதைய பிரதமர் வாச்பேயி தலையிட்டு அவரை வெளியில் தெரியாமல் தப்பிக்க வைத்தார். ஆனால் பாஸ்டன் விமான நிலையத்தில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவிலுள்ள ஓர் சமூக அமைப்பு அவர் ஏன் கைது செய்யப்பட்டார்? என்று விவரம் கேட்டுத் தொணப்பியது. அமெரிக்கக் காவல்துறை உண்மையைச் சொல்ல ராகுலிடம் இசைவு கேட்டது. மறைக்க ஒன்றுமில்லை என்றால் சொல்லித் தொலைத்துவிட வேண்டியதுதானே!

சரி, இனி இந்த அன்னை சோனியாவின் கதைக்கு வருவோம்! தலைமையமைச்சர் பதவியைத் துறந்த ஈகி என்று இன்று உமது கட்சிக்காரர்கள் மேடைகளில் முழங்கி முழங்கி முத்தெடுக்கிறார்கள். 2004ஆம் ஆண்டு நடந்தது என்ன?
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி இத்தாலியரான சோனியா காந்தி பிரதமர் ஆக முடியாது என்று இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு சுப்பிரமணியன்சாமி ஒரு கடிதம் போட்டு வைத்திருந்தார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அந்தச் சட்டப் பிரிவை மேற்கோள் காட்டி “நீங்கள் ஆக முடியாது” என்று மதியம் 3.30 மணிக்கு அதாவது மாலை ஐந்து மணிக்கு சோனியா காந்தி பதவியேற்பதற்கு தயாராயிருந்த வேளையில் “குண்டு” போட்டார்.
340 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடைய பெயரை முன்மொழிவதாக கடிதங்களை அவர் அனுப்பியிருந்தார். ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி தன் பெயரைத் தானே பரிந்துரைத்திருந்தார் என்பதும் “கேவலமான” ஒரு உண்மை.
சோனியா தலைமையமைச்சர் ஆகவேண்டும் என்று விரும்பியதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அவர் பிரதமர் ஆக முடியாது என்ற நிலை வந்தபிறகுதான், தியாக நாடகம் அரங்கேறியது. அதுவரைக்கும் நரி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எவ்வி எவ்விக் குதித்ததது. எட்டாது போனபிறகு, “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று நகர்ந்து விட்டது
ஹாவர்ட்டு பல்கலைக் கழகத்தில் ராகுல் காந்தி நன்கொடை ஒதுக்கீட்டில்தான் இடம் பிடித்தார். அந்த ஆண்டு 11 மில்லியன் டாலர் நன்கொடை கொடுத்தது, வேறு யாருமல்ல ராசீவ் காந்தியின் போபர்சு பீரங்கி ஊழலில் பேர் அடிபட்ட இந்துஜாதான்!
ஆனால் மூன்றே மாதத்தில் பல்கலைக் கழகத்திற்கு ராகுல் காந்தி டேக்கா கொடுத்துவிட்டுக் கிளம்பி விட்டார். ராசீவ் படுகொலைதான் அவர் பல்கலைக் கழகத்தைவிட்டு ஓடுவதற்கான காரணம் என்று பலர் நம்பும்படி சரடு விடுகின்றனர். அது சரி! ஆனால், பொருளியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்று ராகுலே விடும் சரடுதான் சகிக்க முடியாத சரடு! தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளியில் அவர் படித்தபோது, இந்தியில் தோற்றுப்போன “அறிவாளி” என்பது உலகத்திற்குத் தெரியாது. ஆனால் இந்தி பேசும் உ.பி. மாநிலத்திற்குத்தான் அவர் இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சேவை செய்யப் போகிராராம்!
நூலைப் போலச் சேலை! தாயைப் போல பிள்ளை என்பார்கள்.
சோனியா காந்தி தேர்தலில் வேட்பாளர் பற்றியத் தகவல் அளிக்கும்போது தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்றதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சுப்பிரமணியன்சாமி இது குறித்து எதிர் மனு ஒன்று தொடுத்தார். தொடுத்தவுடன் சோனியா காந்தி பட்டென்று தான் கொடுத்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். சோனியா காந்தி உயர்நிலைப் பள்ளி தேறாதவர். கருணாநிதி மாதிரி!
காமராசரும் பள்ளி சென்று படிக்காதவர்தான்! ஆனால், இம்மாதிரிப் பொய் சொல்லிப் பிதற்றுகிறவர்கள் அல்லர் அவர்கள்!
ராகுல் காந்தி, “படித்த இளைஞர்களே வாருங்கள், அரசியலில் குதியுங்கள்” என்று ஆர்ப்பாட்டமாகப் பேசி வருகிறார். ஆனால் தாங்கள் ஏதோ மெத்தப் படித்த மேதாவிகள் என்று இவரும் இவரது தாயாரும் போடுகிற புரட்டு நாடகங்கள் நாற்றமடிக்கின்றன!
அது என்ன ராகுல் காந்தி? காந்திக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற மாபெரும் தலைவர்கள் காந்தியத்தைப் பின்பற்றுவதாகச் சொன்னார்கள். ஆனால் இவர்கள் தேர்தலுக்கு மட்டுமே காந்திப் பேரைப் பயன்படுத்துகிறார்கள். ராகுலின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) ராகுல் வின்சி என்ற இத்தாலியப் பெயரில்தானே இருக்கிறது! பெயரில்கூட உண்மையை உடைக்காத இவர்கள் தேசத்தின் தலைவராகத் துடிக்கிறார்.

ராகுல் வின்சி மீதும் சோனியா மீதும், ராசீவ் மீதும், காங்கிரசுக் கட்சியின் மீதும்தான் அண்மைக் காலங்களில் எத்தனை எத்தனை ஊழல் புகார்கள்! ஏர் இந்தியா ஊழல், கே.ஜி. எரிவாயு ஊழல், அலைக் கற்றை ஊழல், காமன் வெல்த் விளையாட்டுகளில் ஊழல், அசன் அலி ஊழல், சுவிஸ் வங்கி ஊழல், போபர்சு தகரிப் பேர ஊழல், ஆதர்சு ஊழல், இப்படிப்பட்டப் பட்டியலில் அடித்த பணம் பல இலட்சம் கோடிகளாகப் போய்க் கொண்டே இருக்கின்றது. ஆனால், கூச்சமே இல்லாமல் சோனியாக காந்தி அலகாபாத் கூட்டத்திலும் சென்னைக் கூட்டத்திலும் ஊழலுக்கு எதிராகப் போர் தொடுப்போம், ஊழலைச் சகிக்க மாட்டோம் என்று விழி தட்டாமல் சொல்கிறார்.
இளங்கோவன், ஊழலில் ஊறிய தி.மு.க.வோடு கூட்டணி வேண்டாம் என்கிறார்! இந்திரா காந்தி காலத்தின் நகர்வாலாப் படுகொலை தொடங்கி ராசீவின் பல்துறை ஊழல்களில் நாறி, சோனியாவின் சுருட்டல்களில், பொய்ப் பித்தலாட்டங்களில் ஊறி, நரசிம்மராவின் ஊறுகாய் ஊழல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காசு கொடுத்த ஊழல் என்று போய் இன்னும் முளைத்து மூன்று இலை விடாத ராகுல் வின்சி (காந்தி) ஏற்கனவே ஏதோ பழம் தின்று கொட்டை போட்டவர் போல பொய்ப் புரட்டுகளில் ஊறித் திளைக்க இளங்கோவன் காங்கிரசுக்குப் பத்தினி வேடம் போடுகிறார். கருணாநிதி, கனிமொழி, ராசா, மாறன் போன்றோரெல்லாம் முழுச் சுளை விழுங்கிகள் என்றால் நீங்களெல்லாம் முழுப்பலா விழுங்கிகளாயிற்றே!
காங்கிரசு தி.மு.க.வோடு இனி கூட்டு சேராது! ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இனி ஒருக்காலும் காங்கிரசோடு கூட்டு சேரமாட்டார்கள், என்று அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.


tamilarkalam, oodakapirivu. karur.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக