செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தமிழர் உயிர்கள் காப்பாற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்



23.8.2011 கரூர் .
கரூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழர்கள் சாந்தன் , பேரறிவாளன் , முருகன் ஆகியோரின் உயிர் பறிக்கும் மரண தண்டனையை தடை செய்ய கோரி கரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நிகழ்ந்தது.
உலக தமிழர் பேரமைப்பின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சந்திரன் , தமிழர் களம் ரவிசந்திரன் , உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினரும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . இந்த ஆர்பாட்டத்தை வழக்கறிஞர் ராசேந்திரன் , சாமியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர் .
ஆர்பாட்டத்தில் தமிழர் களம் ரவிச்சந்திரன் இந்திய அரசு தொடர்ந்து தமிழர் விரோத போக்கை செயல்படுத்தி வருவது தமிழரின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் , அப்பாவி தமிழர்கள் தண்டிகபடுவது வன்மையான செயல் என்றும் தமிழக அரசு உடனே இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக