தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
தமிழர் உயிர்கள் காப்பாற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
23.8.2011 கரூர் .
கரூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழர்கள் சாந்தன் , பேரறிவாளன் , முருகன் ஆகியோரின் உயிர் பறிக்கும் மரண தண்டனையை தடை செய்ய கோரி கரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நிகழ்ந்தது.
உலக தமிழர் பேரமைப்பின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சந்திரன் , தமிழர் களம் ரவிசந்திரன் , உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினரும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . இந்த ஆர்பாட்டத்தை வழக்கறிஞர் ராசேந்திரன் , சாமியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர் .
ஆர்பாட்டத்தில் தமிழர் களம் ரவிச்சந்திரன் இந்திய அரசு தொடர்ந்து தமிழர் விரோத போக்கை செயல்படுத்தி வருவது தமிழரின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் , அப்பாவி தமிழர்கள் தண்டிகபடுவது வன்மையான செயல் என்றும் தமிழக அரசு உடனே இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக