வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

தமிழர்களை காப்பாற்றக்கோரி மனித தொடரி !


கரூர் .26.08.2011 வெள்ளிகிழமை
ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முருகன், சாந்தன் ,
பேரறிவாளன் ஆகியோரின் கொலை தண்டனையை தடை செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் , உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மனித தொடரி போராட்டம் நடந்தது . நிகழ்வில் இந்திய அரசின் தமிழரை பழிவாங்கும் நோக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்ப பட்டன . மேலும் பேரறிவாளன் சிறையில் எழுதிய கடிதம் தமிழர் களத்தின் அமைபினரால் துண்டறிக்கையாக பரப்புரை செய்யப்பட்டது . போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சிறையில் வாடும் மூவரின் படங்கள் தாங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டியபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . அரசுக்கு இது ஒரு எச்சரிக்கையை தெரிவிப்பதாக இருந்தது .
நிகழ்வில் ம தி மு க , உலகதமிழர் பேரமைப்பு , தமிழர் களம் , தி க , பெரியார் தி க , கொங்கு இளைஞர் பேரவை , பெண்கள் தன் உதவி குழுக்கள் , தமிழர் முன்னணி , நாம் தமிழர் , தமிழர் உணர்வாளர் கூட்டமைப்பு , உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர் . நிகழ்வை ம தி மு க வினர் ஏற்பாடு செய்திருந்தனர் .

செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக