புதன், டிசம்பர் 21, 2011

கேரளா செல்லும் 30,000 லாரிகள் நிறுத்திவைப்பு!

கேரளா செல்லும் 30,000 லாரிகள் நிறுத்திவைப்பு


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நீடிக்கிறது. மேலும் தமிழக லாரிகள், அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் தாக்கப்படுகின்றன.


இதைக்கண்டித்து இன்று ஒருநாள் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கபட்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம அறிவித்தது. இன்று தமிழ்நாடு

\முழுவதும் 30 ஆயிரம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஊர் களில் இருந்தும் கேரளாவுக்கு லாரிகள் எதுவும் செல்லவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக