திங்கள், டிசம்பர் 19, 2011

முல்லைப் பெரியாறு விவகாரம்: தேனியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்தார்.

முல்லைப் பெரியாறு விவகாரம்:
தேனியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்தார்


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார். கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இனி இந்த மண்ணில் ஒரு தமிழனின் உயிர்கூட போகக்கூடாது என்பதில் நாம் உறுதிகொள்வோம். தமிழர் நாம் ஒன்றிணையாமல் இனி எந்த உரிமைகளையும் பெற முடியாது. இருப்பதைக் காப்போம் ! இழந்ததை மீட்போம்!!

செய்தி ஊடகப்பிரிவு தமிழர்களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக