முல்லைப் பெரியாறு விவகாரம்:
தேனியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்தார்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார். கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இனி இந்த மண்ணில் ஒரு தமிழனின் உயிர்கூட போகக்கூடாது என்பதில் நாம் உறுதிகொள்வோம். தமிழர் நாம் ஒன்றிணையாமல் இனி எந்த உரிமைகளையும் பெற முடியாது. இருப்பதைக் காப்போம் ! இழந்ததை மீட்போம்!!
செய்தி ஊடகப்பிரிவு தமிழர்களம்.

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக