ஞாயிறு, டிசம்பர் 18, 2011

தொடரும் போராட்டம்!!

முல்லைப் பெரியாறு உரிமையை விட்டுக் கொடுக்கமுடியாது என போராடி வரும் தமிழர்கள் இன்றும் குமுளியை நோக்கி பல்லாயிரக்கனக்கானோர் நடைபயணம் மேற்கொண்டனர். ஐநுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பலரும் சென்றனர். ஆனால் தமிழக காவல் துறையினர் அவர்களை வாகனங்களில் போகவிடாமல் தடுத்து விட்டனர். எனினும் தமிழர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே சென்றனர். அவர்களின் போராட்ட குணத்தை தடுக்க நினைத்த தமிழக காவல்துறையினர் கூடலுாரிலேயே தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர். வடவரான ராஜேஸ்தார் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது தமிழர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு தமிழகம் நோக்கி ஏதிலிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை இங்கே ஒரு மலையாளிகூட தாக்கப்படவிலை்லை என்பதே நிதர்சனமான உண்மை. இங்கேயும் அவர்கள்
தாக்கப்பட்டால் நிலை இன்னமும் மோசமாகும். இதை தமிழக காவல் துறையினர் உணர்ந்து செயல்படவேண்டும்.
செய்தி் - ஊடகப்பிரிவு. தமிழர் களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக