வெள்ளி, டிசம்பர் 09, 2011

சாது மிரண்டால் காடு கொள்ளாது !






சாது மிரண்டால் காடு கொள்ளாது !
புதுவை 8.12.11


புதுவையில் தமிழர்களத்தின் வேங்கைகள் திரு பிரகாஷ் அவர்களின் தலைமையில் மலையாளிகளின் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் . அதேபோல் கும்பகோணத்திலும் தமிழர் களத்தினர் தங்களது மலையாளி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர் .
தமிழினம் சாதுதான் அது மிரண்டால் இந்தியா தாங்காது என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த போராட்டங்கள் நடத்தப் பட்டன. தேவிகுளம். பீர்மேடு, உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தையும் தமிழர் நாட்டோடு இணைக்க வேண்டும் என்று எழுச்சி முழக்கமிட்டவாறு சாலை மறியலிலும் ஈடுபட்டனர் . 1956 இல் மொழிவழியாக பிரிக்கப் பட்ட நிலப் பகுதிகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் , தமிழர் இழந்த நிலப் பகுதிகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கமிட்டனர் .
செய்தி : ஊடகப் பிரிவு , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக