தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வெள்ளி, டிசம்பர் 09, 2011
சாது மிரண்டால் காடு கொள்ளாது !
சாது மிரண்டால் காடு கொள்ளாது !
புதுவை 8.12.11
புதுவையில் தமிழர்களத்தின் வேங்கைகள் திரு பிரகாஷ் அவர்களின் தலைமையில் மலையாளிகளின் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் . அதேபோல் கும்பகோணத்திலும் தமிழர் களத்தினர் தங்களது மலையாளி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர் .
தமிழினம் சாதுதான் அது மிரண்டால் இந்தியா தாங்காது என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த போராட்டங்கள் நடத்தப் பட்டன. தேவிகுளம். பீர்மேடு, உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தையும் தமிழர் நாட்டோடு இணைக்க வேண்டும் என்று எழுச்சி முழக்கமிட்டவாறு சாலை மறியலிலும் ஈடுபட்டனர் . 1956 இல் மொழிவழியாக பிரிக்கப் பட்ட நிலப் பகுதிகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் , தமிழர் இழந்த நிலப் பகுதிகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கமிட்டனர் .
செய்தி : ஊடகப் பிரிவு , தமிழர் களம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக