வெள்ளி, டிசம்பர் 23, 2011

மாபெரும் கடையடைப்பு மற்றும் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் கைது!!





மாபெரும் கடையடைப்பு மற்றும் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் கைது!!

கரூர் - 23.12.11
கரூரில் இன்று நடைபெற்ற கடையடைப்பு முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது . முல்லை பெரியாரின் அணை உரிமையை காக்கவும். இடுக்கி உட்பட தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நிலப் பகுதிகள் தமிழகத்தோடு இணக்க கோரியும் தமிழர் களம், புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , ஆதி தமிழர் பேரவையினர் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளை சார்ந்தவர்கள் இணைந்து உருவாக்கிய "தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர்" கடையடைப்பு நடத்த பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர் . அதை தொடர்ந்து இன்று காலை முதல் முழு அளவில் கடையடைப்பு நடைபெற்றது . அதை தொடர்ந்து இன்று தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று இந்திய அரசை கண்டித்தும் , கேரளா முதலவர் உம்மன் சாண்டியை கண்டித்தும் முழக்க மிட்டவாறு ஊர்வலமாக சென்றனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் வெற்றியடைய செய்தனர் .
அதை தொடர்ந்து தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் மன்மோகன் உருவ பொம்மையை பாடை கட்டி தூக்கி வந்து எரிக்க முயன்றனர் . அப்போது காவல் துறையினர் தடுத்து , போராட்டக் காரர்களை கைது செய்தனர் . போராட்டக் குழுவில் தமிழர் களம், புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , ஆதி தமிழர் பேரவையினர் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு கைதாகி மாலையில் விடுவிக்கப் பட்டனர் .

செய்தி : ஊடகப் பிரிவு . தமிழர் களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக