புதன், டிசம்பர் 14, 2011

உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிப்பு !- சிவகங்கையில் தமிழர் களம் போராட்டம் !

சிவகங்கை
14.12.2011

சிவகங்கை மாவட்டம் , சாலைகிராமத்தில் கேரளா முதலமைச்சரின் உருவபொம்மையை எரித்த தமிழர் களம் அமைப்பினரை சார்ந்த அறிவழகன் முருகன், செந்தில், கோவிந்தன், ரமேசு , ராமு, மனோகரன், ஆகியோரை தமிழக காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர் .

1956 இல் மொழி வழி மாநிலமாக பிரிக்கப் பட்ட போது இடுக்கி உள்ளிட்ட தமிழர் நிலபகுதிகள் பெரும்பான்மையாக மலையாளிகளால் வந்கவர்பு செய்யப்பட்டது .அந்த நிலப் பகுதிகளை மீண்டும் தமிழ் நாட்டோடு சேர்க்கவேண்டும் என்று இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருகின்றனர் . அதை சீர்குலைக்கும் வகையில் உம்மன் சாண்டி தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துள்ளார் . அதை கண்டிக்காத நடுவண் அரசை கண்டித்தும் , உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை தமிழர் களம் அமைப்பினர் எரிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி ; ஊடகப்பிரிவு. தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக