தமிழக பள்ளி மாணவர்களை இடுக்கியிலிருந்து விரட்டும் கேரள ரவுடிகள்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, 2011, 17:05 [IST]
Save This Page
Print This Page
Comment on This Article
A A A
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.
விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்
பீர்மேடு, தேவிகுளத்தை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருவதால் அவர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டி வருகின்றனர்.
நெடுங்குண்டம், பாரத்தோடு, காரித்தோடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள ரவுடிகளின் தாக்குதலுக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறிவருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாக்குலூத்து மெட்டு, ராமக்கல்மெட்டு பாதைகளில் மலையில் இறங்கி நடந்தே தமிழகப் பகுதியான தேவாரத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மாணவர்கள் பாதிப்பு
இந்த நிலையில் விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பலரும் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாக அங்கிருந்து தப்பி வந்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து வெளியேறாமல் உள்ள தமிழர்களின் பிள்ளைகளை கேரளாவில் தமிழகத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மிரட்டி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு பலவித நெருக்கடி கொடுக்கின்றனர்.
இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் போலீசார் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க மறுக்கிறார்கள் என்று அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் கூறுகின்றனர்
.

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக