திங்கள், டிசம்பர் 19, 2011

முள்ளிவாய்ககாலும் முல்லைப் பெரியாறும்! மலையாளிகளின் தொடர் அட்டகாசம்!!

முள்ளிவாய்ககாலும் முல்லைப் பெரியாறும்!
மலையாளிகளின் தொடர் அட்டகாசம்!!
“எல்லோரையும் நம்புகிற இனம் தமிழினம்” அப்படி நம்பி நம்பிக் கெட்ட இனமும் இத் தமிழினமே. ஆனால், “வந்தாரை வாழ வைக்கும் தமிழினம்” என்று வாய்ச் சவடால் அடிப்பதும் நாமே! ஆனால் தமிழன் வீழ்ந்த ஒவ்வொரு வரலாற்றின் பின்னணியிலும் வந்தேறிகளின் கைங்கரியம் இருந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் மாற்றினத்தார் கொட்டம்! புடடிக்கடை முதல் வட்டிக்கடை வரை மார்வாடிகளும் மலையாளிகளும் கோலோச்சுகிறார்கள்! தமிழ்நாட்டின் நிலபுலங்களெல்லாம் மற்றவர்கள் கையில்! நம் மக்களில் பெரும்பாலோரோ கூலிகளாக, கொத்தடிமைகளாக, குற்றேவல் புரிபவர்களாக நசுக்கப்பட்டிருக்கிறோம்.
நமது வளங்களையும் வாழ்வையும் உழைப்பையும் சுரண்டுகிற இந்த வந்தேறிகள் ஒருக்காலும் நமக்கு நன்றியுள்ளவர்களாக இருந்ததில்லை. மாறாக, நம்மை இன்னும் எந்தெந்த விதங்களில் ஒழிக்கலாம் என்றே நடந்து வந்திருக்கிறன்றனர். இதில் மிகவும் முனைப்போடு செயல்படுபவர்கள் நமது அண்டை மாநிலத்தவரான மலையாளிகளே!
தமிழக கேரள எல்லையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்றைய தமிழக எல்லைக்குள் உற்பத்தியாகும் தண்ணீர் பல ஆண்டுகளாக கிழக்குநோக்கிப் பாய்ந்து தமிழகத்தை வளப்படுத்தி வந்திருக்கிறது. இதில் கருப்பாநதி, கடனாநதி உள்ளிட்டவைகளும் அடங்கும். ஆனால், அம் மலையில் 14 இடங்களில் தண்ணீரைத் திருப்பி கேரளாநோக்கிப் பாய வைக்கிறார்கள். அப்படித் திருடப்பட்டு திருப்பப்பட்ட நதிகளுள் ஒன்றுதான் பம்பை நதி! ஆக, வளமையான தமிழகத்தின் நதிகளைத் திருடி நமது பகுதியை வறட்சி நிலமாக மாற்றி விட்டனர்.
திருவனந்தபுரம், பத்மனாபுரம், இடுக்கி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் 90 விழுக்காடு மக்கள் பச்சைத் தமிழர்கள். ஆனால் 1956ல் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது அநியாயமாக நம் மக்களையும் வளமான இந்தப் பகுதிகளையும் இழந்து விட்டோம். பணிக்கர் என்ற ஒரு மலையாளியின் சொத்துக்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்ததால் அவர் இங்குள்ள சில தமிழரல்லாத திராவிடத் தலைவர்களிடம் பேசி அப்பகுதிகளையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். இன்றைக்கு அந்த மாவட்டங்களில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் கேரள அரசினாலும் அதிகாரிகளாலும் காவல்துறையினராலும் குற்றவாளிகள் போல நடத்தப்படுகிறார்கள். இந்தி தேசியம் திராவிட தேசியம் என்ற மாயைகளுக்குள் சிக்கிய நம் மக்களும் அந்த நாட்களில் என்ன செய்வது என்று தெரியாது விழித்தனர்.
இப்போது பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழர்களின் உழைப்பாலும் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேயரின் சொந்தப் பணத்திலும் கட்டப்பட்டது. தண்ணீர் உற்பத்தியாகும் இடமும், அணை இருக்கும் இடமும் முழுக்க முழுக்க தமிழர்களின் பகுதி! இதன் முழுப் பராமரிப்பும் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் கேரளாவிற்குப் போனது. அப்போது இரு மாநிலத்திற்கும் இடையே நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் தமிழகத்திலிருந்து 47 அதிகாரிகளும் கேரளாவிலிருந்து 47 அதிகாரிகளும் வந்தனர். ஆனால் மொத்தம் வந்த அந்த 94 அதிகாரிகளுள் 93 பேர் மலையாளிகள். அமைச்சர் ராஜா முகமது தவிர. அணை நம் கைவிட்டுப் போனது! நான்கு முறை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்பது சிந்திக்கத் தக்கது. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு தெலுங்கர் என்பதும் அவரது அமைச்சரவையில் 7 தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பதும் யாருடைய குற்றம்? அவருக்கு மாற்றாக நாம் தேர்ந்தெடுத்திருப்பவரோ அல்லது வரிசையில் காத்திருக்கும் விசயகாந்தும் தமிழர்களா என்ன?
ஐயயோ! நாம் வந்தாரை வாழ வைத்த இனமாயிற்றே!
ஈழத் தமிழர்கள் நம் உடன் பிறப்புகள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் அந்தப் போராட்டத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டுவிட்டார்கள். கழுத்தை அறுத்து, கற்பழித்து, மண்வெட்டியால் வெட்டி, கண்களைக் கட்டிச் சுட்டு என்று உலகமே அதிர்ந்து போகும் அளவிற்கும் நம் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டார்கள். இன்றைக்கும்கூட அங்கு முள்வேலி முகாம்களுக்கும் நம் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். விடுதலைப் புலிகள் நடத்தி வந்த அந்த அற்புதமான ஆட்சியைக் குலைத்து முள்ளிவாய்க்காலில் ஒரே நாள் காலையில் 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்று குவிக்க ராசபக்சேவுக்கு எங்கிருந்து துணிவு வந்தது? அந்தக் கோழை இந்தியாவின் முந்தானைக்குள் ஒழிந்து கிடந்து போர் புரிந்தான். போரை நடத்தியது இந்த காந்தி தேசம்! ஆனால் இந்த காந்தி தேசத்தின் நகர்வுகளை நடத்தியவர்கள் அத்தனைப் பேரும் மலையாள அதிகாரிகள். சோனியாகாந்தியையும், மன்மோகன் சிங்கையும், குடியரசுத் தலைவரையும் சுற்றியிருப்பவர்கள், வெளியுறவுச் செயலர்கள், இலங்கைக்கான தூதர்கள் என்று அத்தனைபேரும் மலையாளிகள்! அவர்களுடைய திட்டமிடலில்தான் ஈழத்தில் நமது சொந்தங்கள் வேட்டையாடப்பட்டனர்.
அன்று பிரபாகரனைக் கொல்லத் துடித்த இலங்கைக்கான இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் திக்சித்தும் ஒரு மலையாளிதான். தியாகி திலீபன் யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் முன்பாக இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்து 12 நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல், எச்சில்கூட விழுங்காமல் உண்ணாநோன்பு இருந்தார். இறுதியில் இறந்து போனார். காந்தி தேசம் அகிம்சையை மதிக்கும் என்று அன்று அவர் எண்ணினார். ஆனால், இதே திக்சித்தான் “அவன் செத்தால் சாகட்டும்” என்று விட்டவர். ஆக, மலையாளிகளின் வஞ்சகம் என்பது தமிழினத்தையே அழிக்கக் கங்கணம் கட்டும் வஞ்சகம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மலையாளிகளின் வட்டிக்கடை! எல்லா நகரங்களிலும் அவர்களது தங்கக் கடைகள்! இவர்கள் வந்தபிறகு, தங்கத்தின் விலையைக் கேட்க வேண்டுமா? தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் காய்கறி, இறைச்சி, உணவுப் பொருட்கள் அத்தனையும் அவர்களுக்குப் போகிறது! விஜய் டி.வி. போட்டி நிகழ்ச்சிகளில் அவர்கள் பிள்ளைகளுக்கே வாய்ப்பு! நம்மவர்க்கெல்லாம் ஆப்பு! அவர்களுக்கு தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் எஸ்டேட்டுகளிலும், வீடுகளிலும், நிறுவனங்களிலும் குறைந்த கூலியில் உழைக்க நம் தமிழர்கள், நமது ஆற்றுநீரை முழுக்க அவன் திருடி அவன் வாழ்கிறான்! மொத்தத்தில நம்மை வஞ்சித்து அவர் வளமாய் வாழ்கிறான் என்பதுதான் நீண்டகால உண்மை.
இப்போ முல்லைப் பெரியாறு! தண்ணீர் கீழிருந்து மேல் நோக்கிப் பாயும் என்ற அதிசய காரணத்தைச் சொல்லி வம்படி பண்ணுகிறான். அவனது வம்படியில் அணை உடையுமானால் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் தண்ணீருக்கு அல்லாடும்.
இனி நாம் என்ன செய்வது?
//90 விழுக்காடு தமிழர்கள் வாழும் இடுக்கி மாவட்டத்திற்கு உள்ளேதான் இந்த முல்லைப் பெரியாறு அணை, நீர்ப்பிடிப்புப் பகுதி ஆகியன உள்ளன. ஆகவே, இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்.
//தமிழகத்தில் வட்டிக் கடை, பெட்டிக் கடை, டீக்கடை, தங்கக்கடை என்று நடத்தி தமிழர்களைச் சுரண்டும் வந்தேறிகளை அடையாளம் காண வேண்டும்! அவர்களுடைய நிறுவனங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்!
//தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக மாற்றத் துணை புரிந்த இந்தி தேசிய வல்லாதிக்கத்தையும் திராவிட மாயையும் வேரோடு சாய்க்க வேண்டும்!

தமிழர்களம் கரூர் கிளை
தமிழர்நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக